காங்கிரசில் ஒருவருக்கு ஒரு பதவி : ராகுல்காந்தி வலியுறுத்தல்
Sep 23 2022 1:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காங்கிரசில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற உறுதிப்பாடு பின்பற்றப்பட வேண்டும் என்று திரு. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட ராஜஸ்தான் முதலமைச்சர் திரு. அஷோக் கெலாட் முனைப்பு காட்டி வரும் நிலையில், அவர் கட்சித் தலைவராகத் தேர்வானால், முதலமைச்சர் பதவியையும் தக்கவைத்துக் கொள்ள விரும்புவதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், கேரளாவில் செய்தியாளர்களை சந்தித்த திரு. ராகுல், ஒருவருக்கு ஒரு பதவி என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார்.