இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது : கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் மரணம்
Sep 23 2022 12:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை இன்றும் 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 383 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 58 ஆயிரத்து 425-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் வைரஸ் தொற்றுக்கு மரணமடைந்துள்ளதாகவும், இதன் மூலம் கொரோனா மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 449-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 45 ஆயிரத்து 281 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 4 கோடியே 39 லட்சத்து 84 ஆயிரத்து 695 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும், நேற்று ஒரேநாளில் 6 ஆயிரத்து 424 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 217 கோடியே 26 லட்சத்து 27 ஆயிரத்து 951 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.