நாடு முழுவதும் நவராத்திரி விழா இன்று கோலாகல தொடக்கம் - முதல் நாளையொட்டி, வடமாநிலங்களில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள்
Sep 26 2022 11:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் நவராத்திரி விழா இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. நவராத்திரியின் முதல் நாளையொட்டி, வடமாநிலங்களில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
டெல்லியில் உள்ள ஜந்தேவலன் கோவிலில், அம்மனுக்கு மலர்கள் மற்றும் ஆபரணங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்பே கவுரி ஆரத்தி எனும் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள மும்பா தேவி கோவிலில், அதிகாலையிலேயே, அம்பிகைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பிகையை வழிபட்டனர்.
மஹாராஷ்ட்ரா மாநிலம் கோலாபூரில் உள்ள அம்பாபாய் கோவில், நவராத்திரியை ஒட்டி, பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வருகை அதிகரிக்கப்பதால், அவர்களின் பாதுகாப்பிற்காக கோவிலை சுற்றி ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டு, 160 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, நவராத்திரியின் முதல் நாளில் அம்பிகையை தரிசனம் செய்ய, ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்கு பக்தரர்கள் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். மேலும், கத்ராவில் உள்ள அம்மன் ஆலயங்களில், காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்பிகையை வழிபட்டு வருகின்றனர்.