தெலங்கானாவின் பாரம்பரிய பதுக்கம்மா மலர் திருவிழா : பெண்களுடன் கும்மி அடித்து நடனமாடிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
Sep 26 2022 1:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெலங்கானா மாநிலத்தின் பாரம்பரியமிக்க மலர் திருவிழாவான பதுக்கம்மா பண்டிகையில் பங்கேற்ற மாநில ஆளுநர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன், குழுமியிருந்த பெண்களுடன் கும்மி அடித்து நடனமாடினார். நவராத்திரி காலகட்டத்தில் தெலங்கானாவில், மகாளய அமாவாசை நாளில் தொடங்கி 9 நாட்கள் பதுக்கம்மா விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் திருமதி. தமிழிசை நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.