காங்கிரஸ் மாடல் என்றாலே வாரிசு, சாதிவெறி, ஊழல், வாக்கு வங்கி அரசியல் என பிரதமர் நரேந்திர மோடி சாடல் - குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேச்சு
Nov 24 2022 9:16AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காங்கிரஸ் மாடல் என்றால் வாரிசு, சாதி வெறி, ஊழல் மற்றும் வாக்கு வங்கி அரசியல் என பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார். குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் மாடலானது குஜராத்தையும் நாட்டையும் சீரழித்து விட்டது என்றார். அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமானால், பாஜகவின் கொள்கைகள், நடைமுறைகள் ஆகியவையே முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். மதவெறி மற்றும் பாகுபாடு கொள்கையை பாஜக பின்பற்றவில்லை என்பதால்தான் நாட்டின் இளைஞர்கள் பாஜகவின் கொள்கையை நம்புவதாகவும் குறிப்பிட்டார். கடந்த 20 ஆண்டுகளில் மாநிலம் கண்ட வளர்ச்சியை கருத்தில் கொண்டு குஜராத் மக்கள் பாஜகவுக்கு வரலாற்று வெற்றியை பரிசளிப்பார்கள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.