மத்தியப்பிரதேசத்தில் ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணம்... காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு
Nov 24 2022 12:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டும் வகையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்திவரும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பிரியங்கா முதல்முறையாக இன்று கலந்து கொண்டுள்ளார். குமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்த யாத்திரை, கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மஹாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களை கடந்த இந்த யாத்திரை தற்போது மத்திய பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கந்த்வா மாவட்டத்தில் இன்று காலை தொடங்கிய யாத்திரையில், ராகுலுடன், பிரியங்கா இணைந்தார். பிரியங்கா காந்தியுடன், அவரது கணவர் ராபட் வத்ரா, மகன் ரைஹன் வத்ரா உள்ளிட்டோரும் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.