பெண் குழந்தை பிறந்ததையொட்டி, மகளை பார்த்துக் கொள்ள உயர் பதவியை உதறிய தந்தை - இணையத்தில் பேசு பொருளான இளைஞரின் முடிவு
Nov 25 2022 10:12AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குழந்தை பிறந்ததையொட்டி, இளைஞர் எடுத்த முடிவு, இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. ஐஐடி காரக்பூரில் படித்து பட்டம் பெற்ற அன்கிட் ஜோஷி, முன்னணி நிறுவனம் ஒன்றில் உயர்ந்த பதவியில், அதிக ஊதியத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அன்கிட் ஜோஷி-அகான்ஷா தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை கவனித்து கொள்ள அகான்ஷா, மகப்பேறு விடுப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில், மனைவியுடன் சேர்ந்து தனது குழந்தையை உடனிருந்து கவனித்து கொள்ள முடிவெடுத்த அன்கிட், தனது பணியை ராஜினாமா செய்தார். தன்னுடைய இந்த முடிவுக்கு தனது மனைவியும் பக்க பலமாக இருப்பதாக கூறும் அவர், பரபரப்பாக வேலைக்கு செல்வதைவிட மகளை பார்த்து கொள்வது மன நிறைவை தருவதாக தெரிவித்துள்ளார். முன்னணி நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருந்தபோதும் மகளுக்காக இளைஞர் எடுத்த முடிவு இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.