பழங்குடியின மக்களை, வனவாசி என்று கூறியதற்கு பாஜக, கூப்பிய கரங்களுடன் மன்னிப்புக் கேட்க வேண்டும் - மத்தியபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல்காந்தி பேச்சு
Nov 25 2022 10:15AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒற்றுமை யாத்திரையாக மத்தியப் பிரதேசம் இந்தூருக்கு வரும் போது ராகுல் காந்தியை வெடிகுண்டு வைத்துக் கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்பியுமான ராகுல் காந்தி இந்தியா முழுவதும் ஒற்றுமை யாத்திரையை நடத்திவருகிறார். தமிழகத்தில் தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களைக் கடந்து மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத் தலைநகரான இந்தூருக்கு வரும் போது ராகுல் காந்தியை வெடிகுண்டு வைத்துக் கொலை செய்யப்போவதாக ஒருவர் மிரட்டல் விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து, கொலை மிரட்டல் விடுத்த நரேந்திர சிங் என்ற நபரை உஜ்ஜயினி மாவட்டத்தில் கண்டுபிடித்துக் கைது செய்த போலீசார், அவரை இந்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.