பிரதமர் மோடி பிரச்சாரக் கூட்டத்தில் பாதுகாப்பு குளறுபடி : மேடை அருகே பறந்த ட்ரோனை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர் - 3 பேர் கைது
Nov 25 2022 10:32AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஜராத்தின் பாவ்லாவில் பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மேடைக்கு அருகில் பறந்து கொண்டிருந்த ட்ரோன் ஒன்றை தேசிய பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி ஒருவரைக் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மூன்று பேர் ட்ரோன் கேமரா மூலம் நிகழ்ச்சியை வீடியோ பதிவு செய்ததாகவும் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், ட்ரோன்களில் ஆப்பரேட்டிங் கேமரா மட்டுமே இருந்ததாகவும் வெடிகுண்டு அல்லது வேறு தீங்கு விளைவிக்கும் பொருள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளனர். பிரதமர் வருகையையொட்டி அந்த பகுதியில் ட்ரோன்கள் பறக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நடந்துள்ள இந்த பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.