டெல்லி சாந்தினி சவுக் மார்க்கெட் பகுதியில் இரவு பற்றிய தீ : தொடர்ந்து 12 மணி நேரமாக எரிந்து வரும் தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்
Nov 25 2022 2:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி சாந்தினி சவுக் மார்க்கெட் பகுதியில் பற்றிய தீ 12 மணி நேரமாக எரிந்து வருகிறது. தீயை முழுமையாக அணைக்க தீ அணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். சாந்தினி சவுக்கின் பாகிரத் பேலஸ் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் நேற்று இரவு 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து இரவு 9.30 மணிக்கு தகவல் கிடைத்ததாகவும், உடனடியாக 40-க்கும் மேற்பட்ட தீ அணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், தீ அணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 12 மணி நேரமாக எரிந்துவரும் தீயை அணைக்க, தொடர்ந்து போராடி வருவதாக தீ அணைப்பு வீரர்கள் கூறியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை என்றும், ஆனால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.