ஜம்மு காஷ்மீர்: சோஃபியான் மாவட்டத்தில் குண்டுவெடிப்பை நிகழ்த்த தீவிரவாதிகள் சதி
Nov 26 2022 12:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு காஷ்மீரில், பிரஷர் குக்கர் வெடிகுண்டை, துரிதமாக செயல்பட்டு போலீசார் செயலிழக்கச் செய்ததால் பெரும் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. காவல்துறை மற்றும் ராணுவத்தின் 44-வது ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையினர் இணைந்து நடத்திய சோதனையின்போது, சோஃபியான் மாவட்டம் இமாம்சாஹிப் பகுதியில், குக்கரில் வைக்கப்பட்டிருந்த மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வேகமாக செயல்பட்ட வீரர்கள், வெடிகுண்டை லாவகமாக செயலிழக்கச் செய்தனர். இதனால் பெரும் சதி முறியடிக்கப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.