பண மதிப்பிழப்பு விளைவுகளைப்பற்றி சிந்திக்காமல் எடுக்கப்பட்ட முடிவு அல்ல : உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி
Dec 7 2022 11:32AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பண மதிப்பிழப்பு, விளைவுகளைப்பற்றி சிந்திக்காமல் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்குளை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. நேற்றைய விசாரணையின்போது, பண மதிப்பிழப்பு நடவடிக்கை தேசத்தை கட்டமைக்கும் செயல்பாடு என்றும், சிந்திக்காமல் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும், மத்திய அரசின் பொருளாதார கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கி கூறியது. இதற்கு பதில் தெரிவித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, மத்திய அரசின் முடிவு குறித்து விசாரணை நடத்தவில்லை என்றும், அதனை நடைமுறைப்படுத்தும் விதம் குறித்து மட்டுமே விசாரிப்பதாகவும் தெளிவுப்படுத்தியது.