101வது பகுதி லெப்டினெண்ட் ஜெனரல் கே.சி.பஞ்சநாதன் காலமானார் : ஷில்லாங்கில் பணியில் இருந்தபோது திடீரென மாரடைப்பு
Dec 7 2022 12:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய ராணுவத்தின் 101வது பகுதி பொது பிரிவு கமாண்டிங் லெப்டினெண்ட் ஜெனரல் கே.சி. பஞ்சநாதன் மாரடைப்பால் காலமானார். மேகாலய மாநிலம் ஷில்லாங்கில் பணியில் இருந்த போது பஞ்சனாதனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் அவர் உயிரிழந்தார். இந்திய ராணுவத்தின் பல்வேறு மதிப்புமிக்க பதவிகளை பஞ்சநாதன் வகித்துள்ளார். இந்திய ராணுவத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய பஞ்சநாதனுக்கு ராணுவத்தின் உயரிய விருதான அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.