ஆந்திரா: விசாகப்பட்டினத்தில் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே கல்லூரி மாணவி சிக்கியதால் பரபரப்பு
Dec 7 2022 3:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விசாகப்பட்டினத்தில் ரயிலில் இருந்து இறங்க முயன்ற கல்லூரி மாணவி, எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொண்டார். காண்போரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவம், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள துவ்வாடா ரயில்வே நிலையத்தில் நிகழ்ந்துள்ளது. குண்டூர் - ராயகடா பயணிகள் ரயிலில் வந்து கொண்டிருந்த கல்லூரி மாணவி, துவ்வாடா ரயில் நிலையத்தில் இறங்க முயன்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொண்டார். இதனைக் கண்ட அதிகாரிகள், உடனடியாக ரயிலை நிறுத்தி அந்த மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.