சர்ஜிக்கல் தாக்குதல் குறித்து திக் விஜய்சிங் தெரிவித்த கருத்துக்கு ராகுல் காந்தி கண்டனம்- ராணுவத்தினர் தங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் விளக்கம்
Jan 25 2023 10:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தியது குறித்து இந்திய ராணுவத்தினர் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தங்களது கட்சியின் மூத்த தலைவரான திக் விஜய்சிங் கூறிய கருத்தில் தமக்கு உடன்பாடில்லை என்றும், ராணுவத்தினர் மீது முழு நம்பிக்கை வைத்து இருப்பதாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார்.