உத்தரப்பிரதேசத்தில் வேலையில் இருந்து நீக்கப்பட்டதால் ஆத்திரம் : கார்கள் மீது ஆசிட் கொட்டிய இளைஞர்
Mar 17 2023 5:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் வேலையில் இருந்து நீக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த இளைஞர் கார்கள் மீது ஆசிட்டை கொட்டி பழிவாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நொய்டாவின் White House city பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கார்களை சுத்தம் செய்யும் வேலையை ராம்ராஜ் என்பவர் செய்து வந்துள்ளார். இதனிடையே அவரது வேலையில் குடியிருப்பு வாசிகளுக்கு திருப்தி இல்லாததால் வேலையை விட்டு நீக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராம்ராஜ், பழிவாங்கும் நோக்கில் கார்கள் மீது ஆசிட்டை கொட்டிவிட்டு தப்பியோடிவிட்டார். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.