உத்தரபிரதேசத்தில் சேமிப்பு கிடங்கு இடிந்து விழுந்து பலியானோர் எண்ணிக்கை 14-ஆக உயர்வு : விபத்து குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு
Mar 18 2023 11:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரபிரதேச மாநிலத்தில் சேமிப்புக் கிடங்கின் மேற்கூரை சரிந்து பலியானோர் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது. சம்பல் மாவட்டத்தில் உள்ள தனியார் வேளாண் விளைபொருள் குளிர்பதன சேமிப்புக் கிடங்கில்தான் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இடிபாடுகளுக்குள் இருந்து 21 பேர் மீட்கப்பட்ட நிலையில் அதில் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இடிந்து விழுந்த மேற்கூரை 3 மாதங்களுக்கு முன்தான் கட்டப்பட்டதாகவும், கிடங்கில் அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிக அளவிலான உருளைக் கிழங்குகள் வைக்கப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.