முன்னாள் அக்னி வீரர்களுக்கு CISF-ல் 10% இடஒதுக்கீடு : மத்திய உள்துறை அறிவிப்பு
Mar 18 2023 11:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முன்னாள் அக்னி வீரர்களுக்கு CISF எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய உள்துறை அறிவித்துள்ளது. இளைஞர்களை தற்காலிகமாக ராணுவப் பணிக்கு சேர்க்கும் அக்னிபாதை திட்டத்திற்கு எதிர்ப்பு எழுந்ததையடுத்து அதில் பணியாற்றி வெளியில் வருவோருக்கு மத்திய துணை ராணுவப்படை மற்றும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் பிரிவில் காலியாக உள்ள 10 சதவீத பணியிடங்கள் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து எல்லைப் பாதுகாப்புப் படையில் 10 சதவீதம் என கடந்த 10-ம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது CISF-லும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.