ஜம்மு காஷ்மீரில் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு : நல்வாய்ப்பாக வீட்டில் இருந்தோர் வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்ப்பு
Mar 18 2023 11:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு காஷ்மீரின், உதம்பூர் மாவட்டத்தில் உள்ள செனானி பகுதியில் வீடு ஒன்று, திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கண் இமைக்கம் நேரத்தில் மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்ததால், விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை மூட்டம் சூழ்ந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்தின் போது, நல்வாய்ப்பாக வீட்டில் இருந்தோர் வெளியேறியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.