பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து ராகுல் காந்தி பேசிய விவகாரம்... விளக்கம் கேட்டு டெல்லி போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில் விசாரணை நடத்த ராகுல் வீட்டிற்கு வருகை
Mar 19 2023 3:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக கூறியது பற்றி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்த டெல்லி போலீசார் அவரது இல்லத்துக்கு வந்துள்ளனர். பாரத் ஜோடோ யாத்திரையின் போது ஸ்ரீநகரில் பேசிய ராகுல் காந்தி, ஸ்ரீநகரில் பெண்கள் தொடர் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக தகவல் கிடைத்திருப்பதாக கூறியிருந்தார். ராகுல் பேசியதற்கான ஆதாரங்களை கேட்டு டெல்லி போலீசார் ஏற்கனவே சம்மன் அனுப்பிய நிலையில், டெல்லி சட்டம் ஒழுங்கு சிறப்பு காவல் ஆணையாளர் சாகர் பிரீத் ஹூடா ராகுல் காந்தியிடம் இது குறித்து விசாரிக்க அவரது இல்லதுக்கு வந்துள்ளார்.