டெல்லியில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு வீசப்பட்ட பெண்ணின் சடலம் - போலீசார் தீவிர விசாரணை
Mar 19 2023 3:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி சராய் காலே கான் பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளுக்கான கட்டுமான தளம் அருகே பிளாஸ்டிக் பையில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் சடலம் கிடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து வந்த டெல்லி போலீசார் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இரு பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறிய டெல்லி தென்கிழக்கு இணை ஆணையர் ராஜேஷ் தியோ, சம்பவ இடத்தை ஆய்வு செய்துள்ளதாகவும், உடற்கூராய்வில் தடயம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.