தெலங்கானா முதலமைச்சரின் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறையினர் 10 மணி நேரம் விசாரணை - மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்
Mar 21 2023 12:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேட்டு வழக்கில் தெலங்கானா முதலமைச்சரின் மகளும், எம்எல்சியுமான கவிதாவிடம் அமலாக்கத்துறையினர் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். ஏற்கனே கடந்த 11-ம் தேதி கவிதா டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து 2-வது முறையாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டதன் அடிப்படையில் நேற்று ஆஜரானார். அவரிடம் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு கவிதாவின் பதில்களை அமலாக்கத்துறையினர் பதிவு செய்து கொண்டனர்.