பஞ்சாப்பில் காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங்கைத் தேடும் பணி 4-வது நாளாக தீவிரம் - பல்வேறு பகுதிகளில் மத்திய அதிரடிப்படை கொடி அணிவகுப்பு
Mar 21 2023 1:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங்கைத் தேடும் பணி 4-வது நாளாக நடைபெற்று வருகிறது. அவரது வரிஸ் பஞ்சாப் தே அமைப்பைச் சேர்ந்த 114 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கியமாக அம்ரித்பால் சிங்கின் மாமா மற்றும் கார் ஓட்டுநர் உள்பட 5 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு கருதி அசாம் மாநிலத்தின் திப்ரூகருக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கட்டுக்குள் இருந்தாலும் முதலமைச்சர் பகவந்த் மான், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து சூழல் குறித்து விளக்கமளித்தார். இதையடுத்து மத்திய அதிரடிப்படை பஞ்சாபில் குவிக்கப்பட்டு கொடி அணிவகுப்பு நடைபெற்றது.