நாட்டில் 9 மாநிலங்கள் வழக்குகளை விசாரிக்க சிபிஐக்கு வழங்கிய பொது அனுமதி - 9 மாநிலங்கள் வாபஸ் பெற்று விட்டதாக மத்திய அரசு தகவல்
Mar 24 2023 9:00AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டில் 9 மாநிலங்கள் வழக்குகளை விசாரிக்க சிபிஐக்கு வழங்கிய பொது அனுமதியை வாபஸ் பெற்று விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவையில் பதிலளித்த மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், 1946-ம் ஆண்டின் டெல்லி சிறப்பு காவல் ஸ்தாபன சட்ட 6-வது பிரிவின்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த அந்தந்த மாநிலங்கள், சி.பி.ஐ.க்கு பொது அனுமதி வழங்க வேண்டும் என்றார். அதன்படி அனைத்து மாநிலங்களும் பொது அனுமதி வழங்கி இருந்த நிலையில், கேரளா, தெலங்கானா, மேற்கு வங்கம், சத்தீஷ்கர், ஜார்கண்ட், மேகாலயா, மிசோரம், பஞ்சாப், ராஜஸ்தான், ஆகிய மாநிலங்கள் சி.பி.ஐ.க்கான பொது அனுமதியை வாபஸ் பெற்று விட்டதாகத் தெரிவித்தார்.