எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே "2023" நிதி மசோதா நிறைவேற்றம் : குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியதாக துணை சபாநாயகர் அறிவிப்பு
Mar 24 2023 3:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே "2023" நிதி மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேறியது. 2023ம் ஆண்டுக்கான தொடக்கம் ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில் "2023"ம் ஆண்டுக்கான நிதி மசோதா நேற்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனிடையே, நிதி மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற இருந்த நிலையில், அதானி விவகாரத்தில் எதிர்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் விவாதம் இல்லாமல் மக்களவையில் நிதி மசோதா சார்ந்த துணை மசோதாக்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து தாக்கல் செய்யப்பட்டு பின்னர் நிதி மசோதா-2023 தாக்கல் செய்யப்பட்டது. "நிதி மசோதா-2023" மீது குரல் வாக்கெடுப்பு நடத்திய மக்களவை துணை சபாநாயகர் ஹரிவன்ஸ்சிங், நிதி மசோதா நிறைவேறியதாக மக்களவையில் அறிவித்தார். இதனை தொடர்ந்து மக்களவை வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.