நாட்டின் பணத்தை கொள்ளையடித்தவர்களை பாஜக காப்பாற்றியது ஏன்? : காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி
Mar 24 2023 3:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டின் பணத்தை கொள்ளையடித்தவர்களை பாஜக காப்பாற்றியது ஏன் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், நீரவ் மோடி 14 ஆயிரம் கோடி ரூபாயும், லலித் மோடி 425 கோடி ரூபாயும், மெகுல் சோக்ஸி 13 ஆயிரத்து 500 கோடி ரூபாயும் கொள்ளையடித்துச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த விசாரணையில் இருந்து அவர்கள் தப்பி ஓடுவது ஏன் எனவும் வினவியுள்ளார். ஊழல்வாதிகளை பாஜக ஆதரிக்கிறதா எனவும் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.