புதுச்சேரிக்கு விரைவில் மாநில அந்தஸ்து கிடைக்கும் - சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி தகவல்
Mar 24 2023 6:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரிக்கு விரைவில் மாநில அந்தஸ்து கிடைக்கும் என்றும், இது தொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் சட்டப்பேரவையில், முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டபேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசியபோது, முதலமைச்சர் ரங்கசாமி இதனை தெரிவித்தார். மேலும், அரசுத்துறைகளில், குரூப் டி மற்றும் குரூப் சி ஊழியர்களை தேர்வு செய்ய, மாநில தேர்வாணையம் அமைக்க, மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், புதிய தொழிற்சாலைகளை கொண்டு வரும் வகையில், முதலீட்டாளர் மாநாடு விரைவில் நடத்தப்படும் எனவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.