பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் நேபாள நாட்டிற்கு தப்பி செல்ல வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை - எல்லை பகுதிகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு
Mar 26 2023 5:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் நேபாள நாட்டிற்கு தப்பி செல்ல வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து எல்லை பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காலிஸ்தான் என்ற தனி நாடு கோரி வரும் அம்ரித்பால் சிங்கை தேடும் பணி 9-வது நாளாக தொடர்கிறது. தலைமறைவாக இருந்து வரும் அம்ரித்பால் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறார். அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் அம்ரித்பாலை கைது செய்ய முடியாமல் பஞ்சாப் போலிசார் திணறி வருகின்றனர்.