தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்கள் அனைவரிடமும் நீதியைக் கொண்டு சோ்க்க நடவடிக்கை : ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற புதிய கட்டட திறப்பு விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேச்சு
May 25 2023 9:02AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்கள் அனைவரிடமும் நீதியைக் கொண்டு சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உயர் நீதிமன்ற புதிய கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று திறந்து வைத்தார். விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய குமார் மிஸ்ரா, முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், அரசியல் சாசனம் குறிப்பிட்டுள்ள அட்டவணை மொழிகளில் நீதிமன்ற தீா்ப்புகளை பெயா்ப்பதன் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் அவற்றை எடுத்துச் செல்ல முடியும் எனத் தெரிவித்தார்.