புகார் அளிக்கச் சென்றபோது செல்பி எடுத்தவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை : பிக்பாஸ் பிரபலம் கோரி நகோரி குற்றச்சாட்டு
May 26 2023 3:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புகார் அளிக்கச் சென்றபோது செல்பி எடுத்தவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என் பிக்பாஸ் பிரபலம் கோரி நகோரி குற்றம்சாட்டியுள்ளார். வடஇந்தியாவில் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடனக் கலைஞரான கோரி நகோரி, இன்ஸ்ட்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது சகோதரியின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அஜ்மீரில் உள்ள கிஷன்கருக்குச் சென்றபோது அவரது மைத்துனர் ஜாவேத் ஹுசைனும் அவரது நண்பர்களும் தன்னைத் தாக்கியதாக பகிர்ந்துள்ளார். இதுகுறித்து புகார் அளிக்கச் சென்றபோது, போலீஸார் தன்னுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டதாகவும், ஆனால் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.