கேரளாவில் ஹோட்டல் உரிமையாளரை கொலை செய்த 2 பேர் கைது : உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்து வனப்பகுதியில் வீசியது அம்பலம்
May 26 2023 4:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் ஹோட்டல் உரிமையாளரை கொலைசெய்து விட்டு உடலை துண்டு துண்டாக வெட்டி வனப்பகுதியில் வீசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மலப்புரம் மாவட்டம் திரூரை சேர்ந்த சித்திக் அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்தார். கடந்த சில நாட்களாக இவரை காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கோழிக்கோடு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சித்திக் அறையெடுத்து தங்கியதும், சித்திக்கை ஹோட்டல் ஊழியரான ஷிபில் தனது பெண் தோழி பர்ஹானாவுடன் சேர்ந்து கொலை செய்து உடலை வனப்பகுதியில் வீசியதும் தெரியவந்தது. இதுகுறித்து கேரள போலீசார் அளித்த தகவலின் பேரில் சென்னையில் பதுங்கியிருந்த 2 பேரையும் தமிழக காவல்துறையினர் கைது செய்தனர்.