கர்நாடகாவில் கடந்த 10 நாட்களாகதொடரும் கனமழை : பெங்களூரு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
May 31 2023 6:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பெங்களூரு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் முழுவதும் கடந்த வாரம் கொட்டித் தீர்த்த கனமழையால், 10 பேர் உயிரிழந்தனர். கனமழையால் ராஜாஜி நகர், வெஸ்ட் ஆப் கார்டு சாலையில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. இந்நிலையில், கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவில் கடந்த 10 நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் வீடுகளுக்குள் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து சென்றதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பெங்களூருவில் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகாவின் தெற்கு உட்பகுதியில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.