குஜராத்தில் மகளை 25 முறைக்கு மேல் கத்தியால் குத்திக் கொன்ற தந்தை : மகளின் நடவடிக்கை குறித்து, பேசியபோது ஆத்திரத்தில் வெறிச்செயல்
May 31 2023 7:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஜராத் மாநிலம் சூரத்தில், மகளை 25 முறைக்கு மேல், கத்தியால் குத்திக்கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு குடும்பத்துடன் வசிக்கும் அவர், குடும்பத்துடன் மொட்டை மாடியில் உறங்கச் சென்றுள்ளார். அப்போது, தனது மகள் குறித்து மனைவியிடம் பேசியுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், மனைவி, கீழே வந்துள்ளார். பின்தொடர்ந்து வந்த கணவன், மனைவியை குத்த முயன்றபோது, சம்பந்தப்பட்ட மகள் தந்தையை தடுத்துள்ளார். அப்போது, 25 முறைக்கு மேல், தந்தையே, மகளை கத்தியால் குத்தினார். இதில், மகள் உயிரிழந்தார். இரவு 11.30 மணிக்கு கொலை நடந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.