ரயில் விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலத்திற்கு மீண்டும் பயணம் : பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க உள்ளதாக மம்தா பானர்ஜி தகவல்
Jun 6 2023 12:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோர ரயில் விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலத்திற்கு மீண்டும் செல்ல உள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ரயில் விபத்து நடைபெற்ற மறுநாள் சம்பவ இடத்திற்குச் சென்ற அவர், ரயில்வேத்துறையின் மெத்தனச் செயல்பாடு குறித்து குற்றம் சாட்டினார். பின்னர் விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்தநிலையில், ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் கட்டாக் நகரங்களுக்கு மீண்டும் செல்ல உள்ளதாகவும், விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு நிவாரண உதவி அளிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு புதன்கிழமையன்று பணி நியமன ஆணை வழங்க உள்ளதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.