பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை : பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் வெறிச் செயல்
Jun 6 2023 1:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மும்பையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட பணத்தகராறில் இளைஞரை அவரது நண்பர்களே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை சிவாஜி நகர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான சபீர் தனது நண்பர்களான ஷாருக், நிசார் உள்ளிட்ட 4 பேருக்கு பிறந்த நாள் விருந்து அளித்துள்ளார். அப்போது, விருந்துக்கான பணத்தை யார் செலுத்துவது என வாக்குவாதம் ஏற்பட்டது. இது, கைக்கலப்பாக மாறி சபீரை அவரது நண்பர்கள் சரமாரி தாக்கினர். இதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், சபீரின் நண்பர்களான ஷாருக் மற்றும் நிசாரை கைது செய்தனர். மேலும், கொலை சம்பவத்தில் தொடர்புடைய 2 சிறார்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.