மகாராஷ்டிராவில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் பதற்றம் : ஔரங்கசீப், திப்பு சுல்தான் வாட்சப் ஸ்டேட்டசால் ஏற்பட்ட மோதல்
Jun 7 2023 2:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாராஷ்டிரா மாநிலத்தில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் பதற்றம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் கோலாப்பூர் பகுதியில் ஔரங்கசீப் மற்றும் திப்பு சுல்தானை புகழ்ந்து சிலர் வைத்திருந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைரலானது. அதற்கு ஒரு பிரிவினர் விமர்சித்து பதிவிட்டதால் மோதல் உருவானது. இதையடுத்து சில இந்து அமைப்பினர் போராட்டம் மற்றும் பந்த்துக்கு அழைப்பு விடுத்து கோலாப்பூரில் திரண்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் அந்த இடமே போர்க்களமாக மாறியது.