மும்பையில் அரசு விடுதி அறையில் தூக்கில் தொங்கிய இளம்பெண் : பெண்ணை கொன்று தூக்கில் தொங்கவிட்டு விடுதி காவலரும் தற்கொலை
Jun 7 2023 3:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாராஷ்ட்ர மாநிலம் மும்பையில் கல்லூரியில் படித்த 18 வயது இளம்பெண், விடுதி அறையில் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விதர்பா பகுதியைச் சேர்ந்த அந்த இளம்பெண், தெற்கு மும்பையில் அரசு பெண்கள் விடுதியில் தங்கியிருந்தார். வெளியே பூட்டப்பட்டிருந்த அவரது அறைக்கதவு, நீண்டநேரம் திறக்கப்படாததால், விடுதி ஊழியர்கள் ஜன்னல் வழியே பார்த்தபோது, அந்தப் பெண் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, விடுதியின் காவலாளி கனோஜியா என்பவர் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, பின்னர் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்தக் காவலாளி அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.