மேற்குவங்கம் மாநிலத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கு : பொதுநல மனுவை விசாரணை ஏற்க மறுத்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் தள்ளுபடி
Jan 11 2024 7:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்குவங்க மாநிலத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் பொதுநல மனுவை விசாரணை ஏற்க மறுத்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 5ம் தேதி மேற்குவங்க மாநிலத்தில் ரேசன் ஊழல் தொடர்பாக சோதனையை மேற்கொள்ள சென்ற அமலாக்கத்துறையினர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.எஸ் சிவஞானம் தலைமையிலான அமர்வில் வழக்கு விசாரித்தது. அப்போது இவ்வழக்கில் தங்களுக்கு பாதுகாப்பு தேவை எனக்கோரி மத்திய பாதுகாப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தால் விசாரணைக்கு ஏற்கப்படும் என தெரிவித்த நீதிபதிகள் அமர்வு, தற்போதைக்கு பொதுநல வழக்கு ஏற்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.