மிக நீளமான கடல் பாலம் மும்பையில் இன்று திறப்பு... அடல் சேது பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
Jan 12 2024 8:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அமைந்துள்ள இந்த பாலத்துக்கு அடல் சேது என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாலம், முக்கிய துறைமுகங்களை இணைக்கும் விதமாக கட்டப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு டிசம்பரில் இந்தப் பாலத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மொத்தம் 17 ஆயிரத்து 840 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அடல் பாலம், சுமார் 21.8 கிலோமீட்டர் நீளமுடைய 6 வழிப் பாலமாகும். இத்தகைய சிறப்பு கொண்ட அடல் பாலத்தை, இன்று பிற்பகல் 3.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து அதில் பயணம் செய்ய இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.