ஜம்மு-காஷ்மீரில் இரு பிரிவினைவாத அமைப்புகளின் சொத்துக்களை முடக்க ஆணை : மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
Jan 12 2024 12:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டு வரும் 2 பிரிவினைவாத அமைப்புகளின் சொத்துகள், வங்கிக் கணக்குகளை முடக்கி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவித்து, இந்தியாவுக்கு எதிரான போக்கை கடைப்பிடித்து வருவதாக 'தெஹ்ரீக்-இ-ஹுரியத்', 'ஜம்மு-காஷ்மீா் முஸ்லிம் லீக்' ஆகிய அமைப்புகள் மத்திய அரசால் அண்மையில் தடை செய்யப்பட்டன. பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டில் செயல்படட இந்த 2 அமைப்புகளின் சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் ஆகியவற்றை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ்
முடக்க ஜம்மு-காஷ்மீா் நிர்வாகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.