உலகிலேயே முதன் முறையாக 104 செயற்கைக்கோள்கள் PSLV C-37 Rockrt மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இந்தியா புதிய உலக சாதனை
Feb 15 2017 11:16AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகிலேயே முதன் முறையாக, 104 செயற்கைக்கோள்கள், PSLV C-37 Rockrt மூலம் இன்று காலை 9.28 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதன்மூலம், இந்தியா புதிய உலக சாதனை படைத்துள்ளது.
PSLV C-37 Rockrt மூலம், ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, தீவிர முயற்சியில் ஈடுபட்டது. இந்தியாவின் Cartosat-2 என்ற வானிலை ஆய்வுக்கான செயற்கைக்கோளுடன், அமெரிக்காவைச் சேர்ந்த 96 செயற்கைக்கோள்களும் மற்றும் நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த செயற்கைக் கோள்களும் இவற்றில் அடங்கும். 104 செயற்கைக்கோள்களை சுமந்துசெல்லும் PSLV C-37 Rockrt, திட்டமிட்டபடி இன்று காலை 9.28 மணியளவில் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதன்மூலம், உலகிலேயே அதிக செயற்கைக்கோள்களை ஒரே Rockrt-ல் அனுப்பும் வரலாற்றுச் சாதனையை இஸ்ரோ நிகழ்த்தியுள்ளது.