சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் பின்தங்கிய வகுப்பினருக்கான அரசியல் சாசன அமைப்பைச் சார்ந்த தேசிய ஆணையத்தை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Mar 24 2017 10:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
NSEBC எனப்படும் இந்த ஆணையம் தற்போதுள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு பதிலாக புதிதாக அமைக்கப்படுகிறது. பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவெடுக்கப்பட்டது. அரசியல் சாசனத்தில் இதற்கான திருத்தத்தை கொண்டு வருவது என்றும், அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. புதிய ஆணையத்திற்கு அரசியல் சட்ட அந்தஸ்து அளிக்க வகை செய்யும் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய ஆணையத்தில் தலைவர் ஒருவரும், துணைத் தலைவர் ஒருவரும், 3 உறுப்பினர்களும் இடம் பெற்றிருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.