வறட்சி நிவாரணமாக தமிழக அரசு சுமார் ரூ.39 ஆயிரம் கோடி கோரியிருந்த நிலையில் மத்திய அரசு ரூ.2 ஆயிரத்து 14 கோடி ஒதுக்கியிருப்பதற்கு விவசாயிகள் கடும் கண்டனம் : டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள், மத்திய அரசின் செயலால் மிகவும் மன வருத்தம்

Mar 24 2017 6:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

வறட்சி நிவாரணமாக தமிழக அரசு சுமார் 39 ஆயிரம் கோடி ரூபாய் கோரியிருந்த நிலையில், மத்திய அரசு 2 ஆயிரத்து 14 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள், மத்திய அரசின் இச்செயலால், தாங்கள் மிகவும் மன வருத்தம் அடைந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

நதிகளை இணைக்க வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு போதிய நிவாரண உதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் தமிழக விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தைப் பற்றி, சிறிதும் சிந்திக்காமல் மத்திய அரசு வெறும் 2 ஆயிரத்து 14 கோடி ரூபாய் வறட்சி நிவாரணமாக அறிவித்திருப்பதற்கு அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு சுமார் 39 ஆயிரம் கோடி ரூபாய் கோரியிருந்த நிலையில், யானைப் பசிக்கு சோளப்பொறி போல, மிகவும் சொற்ப நிதியை மத்திய அரசு வழங்கியிருப்பது பாரபட்சமான நடவடிக்கை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனிடையே, விவசாயிகள் போராட்டத்திற்கு, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் திரு. நாசர், பொதுச் செயலாளர் நடிகர் விஷால், நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர், விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00