அசாமில் 8 கிலோ எடை கொண்ட யானை தந்தத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற 2 பேர் வனத்துறையினரால் கைது
Apr 27 2017 4:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் உள்ள வனப்பகுதிகளில் யானைகளை கொன்று அதன் தந்தங்களை பல கோடி ரூபாய்க்கு வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்தி செல்லும் செயலில் சமூக விரோதிகள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அசாமில் உள்ள புகழ்பெற்ற காசிரங்கா தேசிய பூங்கா அருகே 8 கிலோ எடை கொண்ட யானை தந்தத்துடன் சென்ற 2 பேரை வனத்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்காக தந்தத்தை எடுத்து சென்றது தெரியவந்தது.