சாரதா சிட்பண்டு மோசடி வழக்கில் சுபத்ரா ராய்க்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை - ஜாமீனுக்காக வழங்கப்பட்ட காசோலைக்கான பணத்தை செபிக்கு அனுப்ப உத்தரவு
Apr 27 2017 8:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சாரதா சிட்பண்டு மோசடி வழக்கில், ஜாமீனுக்காக வழங்கப்பட்ட காசோலைக்கான பணத்தை ஜூலை 15க்குள் செபியில் டிபாசிட் செய்யவிட்டால் திஹார் சிறைக்கு அனுப்பப்படும் என சுபத்ரா ராய்க்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சாரதா சிட்பண்ட் மூலம் பொது மக்களின் 24 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக சகாரா குரூப் தலைவர் சுபத்ரா ராய், கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 4-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, ஜாமீன் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை அடுத்து, நிபந்தனையுடன் சுபத்ரா ராய்க்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ஜாமீனுக்காக வழங்கப்பட்ட காசோலைக்கான ஆயிரத்து 500 கோடி ரூபாய் பணத்தை ஜூலை 15க்குள் செபியில் டிபாசிட் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். தவறும் பட்சத்தில், நீதிமன்றத்தில் இருந்து நேரடியாக திஹார் சிறைக்கு அனுப்பப்படும் என சுத்ரா ராய்க்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.