காவலர் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு முகாம் - ஜம்மு காஷ்மீரில் பெண்களும் ஆர்வமுடன் பங்கேற்பு
Apr 28 2017 11:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு-காஷ்மீரில் காலியாக இருக்கும் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், பெண்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
நாட்டின் எல்லை மாநிலங்களில் ஒன்றான ஜம்முகாஷ்மீர் பரபரப்புக்கு பஞ்சமில்லாத பகுதியாகும். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் மற்றும் வன்முறையாளர்களின் போராட்டங்களால் அங்கு எப்போதும் ஒரு பதற்றமான சூழல் இருந்து வருகிறது. இதனால், காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டு அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீநகரில் உள்ள பாக்ஷி அரங்கில் நேற்று காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்க அப்பகுதியிலிருந்தும், சுற்றுவட்டாரத்திலிருந்தும் ஏராளமான இளைஞர்களும், பெண்களும் அங்கு குவிந்தனர். அவர்களுக்கு உடல் தகுதி அடிப்படையில் தேர்வு நடைபெற்றது.