சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய "ஆபரேஷன் பிரஹார்" என்ற அதிரடி தாக்குதலில் 12 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை
Jun 26 2017 5:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில், கடந்த ஏப்ரல் மாதம் மாவோயிஸ்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில், மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த 25 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், தொண்டமர்கா என்ற பகுதியில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தப் போவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சி.ஆர்.பி.எப். வீரர்களுடன் மாநில போலீசாரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பதுங்கியிருக்கும் மாவோயிஸ்டுகளை பிடிக்க ஆபரேஷன் பிரஹார் என்ற அதிரடி தாக்குதல் நடத்தினர். பலமணி நேரம் நீடித்த இந்த சண்டையில், 12க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த ஆபரேஷனில் பாதுகாப்பு படை தரப்பில் 3 வீரர்கள் பலியானதாக கூறப்படுகிறது.