டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஆளில்லா விமானம் பறந்ததாக விமானிகள் அளித்த தகவல் : விமான நிலைய போலீசார் விசாரணை

Aug 21 2017 10:11AM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், ஆளில்லா விமானம் பறந்ததாக இரு விமானிகள் அளித்த தகவலின் பேரில், விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், நாட்டிலேயே பரபரப்பாக இயங்கக்கூடிய முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றாக உள்ளது. இந்த விமான நிலையத்தில், Air Asia விமானம் ஒன்று தரையிறங்கும் போது, ஆளில்லா விமானம் போன்ற பறக்கும் பொருளை இரு விமானிகள் பார்த்துள்ளனர். இதனையடுத்து, உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு விமானிகள் தகவல் அளித்ததை தொடர்ந்து, சிறிது நேரம் விமான நிலைய ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டது.இதனால், இரு ஏர் இந்தியா விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில், எதுவும் சிக்காததை அடுத்து, மீண்டும் விமான சேவை தொடங்கியது. இதனிடையே, விமான நிலையத்தில் ஆளில்லா விமானம் பறந்ததாக இரு விமானிகள் அளித்த தகவலின் பேரில், விமான நிலைய போலீசார், மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00