உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட நிலநடுக்கதால் கட்டடங்கள் குலுங்கின : அச்சத்தால் மக்கள் தெருக்களில் தஞ்சம்
Aug 23 2017 8:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கதால் கட்டடங்கள் குலுங்கின. அச்சத்தால் மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம் ஷமோலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் அங்குள்ள பொதுமக்கள் பீதியுடன் வீடுகளிலிருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.
ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியிருக்கும் இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதங்கள் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், உயிர்சேதம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.