சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீதான பலகோடி ரூபாய் நில மோசடி வழக்கு - சி.பி.ஐ விராணைக்கு உத்தரவிட்டது மத்திய அரசு
Aug 23 2017 9:02AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா பலகோடி ரூபாய் நில மோசடி செய்தது தொடர்பாக ராஜஸ்தான் மாநில அரசின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு சி.பி.ஐ விராணைக்கு உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பிக்கானர் மாவட்டத்தில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள 374 ஹெக்டேர் அரசு நிலத்தை காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா குறைந்த விலைக்கு வாங்கியது தொடர்பாக 18 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ராணுவத்தின் துப்பாகிசுடும் பயிற்சி களத்தை விரிவுபடுத்தும் நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட இந்த நிலங்களை நில மாஃபியா கும்பல் போலி ஆவணங்களை தயாரித்து விற்று விட்டதாக Kolayat தாசில்தார் புகார் அளித்ததன் பேரில் இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
தற்போது இந்த நிலமோசடி வழக்குகள் அணைத்தையும் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என ராஜஸ்தான் மாநில அரசு பரிந்துரை செய்துள்ளதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த நிலமோசடி தொடர்பாக ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான Skylight உள்ளிட்ட நிறுவனங்களில் அமலாகத்துறை ஏற்கனவே அதிரடி சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது.
இந்தப் பிரச்சனையில் ராஜஸ்தான் அரசு காங்கிரஸ் தலைவரின் குடும்பத்தினர் மீது வேண்டுமென்றே சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்று மாநில காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இந்த நில பேரம் தொடர்பாக மாநில அரசு அமைத்த விசாரணைக்குழு அறிக்கையில், பல பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அந்த அறிக்கையை மாநில அரசு வெளியிட வேண்டும் என்றும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.